Tuesday, March 4, 2014

சுஜாதா


16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்களை விழுங்கிக் கடத்தல்! கொழும்பில் இருந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த அகமது மொய்தீன் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். கடத்தப்பட்ட ரத்தினக்கற்களின் எடை 475 கிராம். 27 ஆணுறைகளில் பொட்டலம் கட்டி அவற்றை அவர் விழுங்கியுள்ளார். விமான நிலையத்தில் இறங்கிய காயல்பட்டினத்தைச் சேர்ந்த மொய்தீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. எக்ஸ்ரே பரிசோதனையில் ரத்தினக் கற்கள் வயிற்றில் உள்ளது தெரிய வந்தது.
மொய்தீன் தன் பெயரை நூர் முகமது ஜமால் என்று பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விநோதமான சம்பவத்தில் எனக்குச் சில ஆதாரச் சந்தேகங்கள்.
1. எக்ஸ்ரே பரிசோதனைக்குப் பின் எப்படி அந்தக் கற்கள் நீக்கப்பட்டன?
2. ஆணுறைகள் வாங்கும்போது கடைக்காரர், அவரிடம் என்ன வினவியிருப்பார்?
''இருபத்தேழுங்களா?''
''ஆமாங்க...''
''ஒருத்தருக்கா...?''
''ஆமாங்க!''
''கை குடுங்க... என்னால ரெண்டு சமாளிக்க முடியலை.''
                                                                                                                 Courtesy : vikatan.com 

We miss you...!!!