Thursday, October 16, 2008

இதோ வந்துட்டேன்.....

உலகத்தமிழனுக்கு இருக்கும் பல கோடி பிரச்சனைகள் போதாதென்று இதோ நானும் களத்தில்.... "இவன் ஓசி ல குடுத்தா பினாயில கூட குடிப்பான்" னு ஒரு படத்தில் வரும் வசனத்தை போல ஓசியில் கூகிளார் கொடுக்கும் ப்ளாகில் ஆரம்பித்தாயிற்று கணக்கை... என்ன எழுதப்போகிறேன்? வானத்திற்கு கீழே உள்ள அத்தனையும் ப்ளாக்குகளில் லோல் படும்போது, புதிதாக எதை எழுத முடியும்?
எழுத்து என்பது எதாவது ஒரு வகையில் யாரையாவது பாதிக்க வேண்டும், அப்போது தான் அதை எழுதியதின் காரணம் முழுமை பெறும் என்று நம்புபவன் நான். நீண்ட நாள் திட்டமிட்டு உங்களை எல்லாம் பெருசா பாதிக்க.... இதோ வந்துட்டேன்...

ஹப்பாடா... கணக்கை ஆரம்பிக்கவே நாக்கு தள்ளுது... ரெண்டு நாள்ல திரும்பி வர்றேன்... மயிரை (அதாங்க முடி) பத்தி அடுத்த பதிவில பேசலாம்.