Sunday, June 7, 2009

மசால் வடையும், முதல் கதையும்..... !



அவளா அது? என்னால் நம்பவே முடியவில்லை. கண்கள் இடுங்கி, உடல் இளைத்து, முடி எல்லாம் கொட்டிப் போய்..........


"நரை கூடிக் கிழப் பருவமெய்தி....." மேடையில் பாடி பரிசு வாங்கிய என் ரம்யாவா அவள்? பத்து வருட மண வாழ்க்கை ஒரு அழகியை இப்படியா சீர்குலைத்துவிடும்......................?


யோசித்துக் கொண்டே எதிரே வந்த ஐஸ் வண்டியைக் கவனிக்காமல்...... சட்...... "யோவ், பாத்து போய்யா, கூட்டமாப் பொண்ணுங்களப் பாத்தா உங்களுக்கெல்லாம் கண்ணு தெரியாதில்ல?"

அவனை அலட்சியப் படுத்திவிட்டு அவளை மீண்டும் பார்த்தேன். அட.... இங்கே தானே நின்று கொண்டிருந்தாள்? ஒரு வேளை அது அவள் இல்லையோ? ச்சே, ச்சே.... அது அவள் தான்.... என்ன தான் தோற்றம் மாறிவிட்டாலும் அந்த தெத்துப் பல் அது அவள் தான் என்று காட்டிக் கொடுத்ததே.... எங்கே போயிருப்பாள்.... ம்ஹூம்.....

"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" இடையில் இந்த செல் போன் சனியன் வேறு.... எடுத்தால் மறுமுனையில்..... ஐஸ்வர்யா ராய்..................!!!!"


சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தேன்... நெட்டி முறித்து நீண்ட பெருமூச்சை விட்டேன்.... கதை எழுதுவது இவ்வளவு கஷ்டமா.? செந்தில் கணேஷ் சொன்னது சரிதான்..... எனக்கெல்லாம் கதை எழுத வராது போலிருக்கிறது... மூக்கைத் துளைக்கும் வாசனையால் கவரப் பட்டு, கவனம் கலைந்தேன். எதிரே டேபிளின் மேல் சற்று முன் மாதவி வைத்து விட்டு போன மசால் வடை, ஆவி பறக்க சுண்டி இழுத்தது.

கதை எழுதிய பேப்பரை அப்படியே மடித்து வடையை சரியாக நடுவில் வைத்து மறுபடியும் ஒரு மடிப்பில் அப்படியே நசுக்கி, எடுத்து ஒரு விள்ளல் வாயில் போட்டு மென்று கொண்டே ஆவி பறக்கும் காப்பியை உறிஞ்சினேன். கூடவே ஒரு வில்ஸ் பில்டர் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் வீட்டில் சிகரெட் பற்ற வைத்தால் வேறு ஏதாவது பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் அந்த நினைப்பை உடனே உதறினேன்.


வடை ஆசை முடிந்ததும், கதை ஆசை லேசாகத் தலை தூக்கியது. எழுதிப் பார்க்கலாமா? இது வரை எழுதிய பேப்பரை பார்த்தேன். அடடா, கதை போச்சே....

சரி வேறு ஒரு பேப்பரை எடுப்போம். யோசிக்கும் போதே உள்ளே இருந்து ஒரு குரல்..... "டேய் எவ்வளவு நேரமா கத்துறேன் - பால் வேணும், சக்கரை வேற தீந்து போச்சு, வாங்கிட்டு வானு? என்னடா பண்ணுற?" என் பிரிய சகியின் குரல் தான்... அன்பு மிகுந்தால் "டேய்"...

"அது ஒன்னும் இல்லம்மா, ஒரு கதை எழுதிப் பாக்கலாம்னு......"


"உன்னை நம்பி வந்த என்னோட கதையே இங்க சிரிப்பா சிரிக்குது.. இதுல நீ வேறயா? போடா.... போயி பால வாங்கிட்டு வா... வந்தா மத்தியானம் சாப்பாடு... இல்லன்ன்னா கொலப்பட்டினி போட்டுருவேன்..."

காப்பியை ஒரே உறிஞ்சலில் முடித்துவிட்டு சரேலென்று எழுந்தேன் - வடை மடித்த கதை பேப்பரை கசக்கிக் கொண்டே.....


Friday, June 5, 2009

வ(எ)ண்ணச்சிதறல்கள்

வலைப்பூவின் ஜாம்பவான்கள் எல்லாரும் மிக்ஸிங் பதிவுகள் போட்டு வருவது நீங்கள் அறிந்ததே. காக்டெயில் என்று கார்க்கியும், அவியல் என்று பரிசலும், மிக்ஸ்டு ஊறுகாய் என்று ஆதிமூல கிருஷ்ணனும், இன்னும் பலப் பல பெயர்களில் பல மூத்த பதிவர்களும் பதிவிட்டு வருகிறார்கள். பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து குழந்தைகள் தாங்களும் அவ்வாறே முயற்சி செய்யும் இல்லையா? அது போன்ற ஒரு முயற்சி தான் இந்த வ(எ)ண்ணச்சிதறல்கள். இனி அடிக்கடி பார்க்கலாம் எனது எண்ணச் சிதறல்களை - வண்ணச்சிதறல்களாய்.
**************************************************************************

ஆரம்பித்து விட்டது டுவென்டி டுவென்டி உலகக் கோப்பை. அடிக்கடி பார்ப்பதால் சுவாரஸ்யம் குறைந்து விடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். சென்ற ஐபிஎல் போட்டிகளே, ஏதோ முடிவு தெரிந்து விட்ட ஒரு பக்க கதை போல தான் இருந்தன. யாரும் எதிர் பார்க்காத இரண்டு சொத்தை அணிகள் பைனலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? புக்கிகளுக்கு பணம் கொழிக்கும் வரம் இந்த டுவென்டி டுவென்டி. பார்க்கும் நமக்கு? - பெரிய பட்டை நாமம்.

**************************************************************************
மிகப் பாதுகாப்பான விமான சேவை அளிப்பதாக நம்பப் பட்டு வந்த ஏர் பிரான்ஸ் - ன் விமானம் பிரேசிலில் இருந்து பாரிஸ் வரும் போது காணாமல் போயிருக்கிறது - 228 பயணிகளுடன். இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது பெரும் சோகம். ஏர் பிரான்சின் விமானத்துக்கே இந்த கதி என்றால், அற்புத சேவை தரும் ஆப்பிரிக்க விமானங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அடுத்த முறை ஊருக்குப் போவதற்கு டிக்கெட் எடுக்கும் போது இது நினைவுக்கு வந்து தொலைக்காமல் இருக்க வேண்டும் என்று வாழைப்பாடி தண்டு மாரியம்மனை வேண்டிக் கொள்கிறேன்.
**************************************************************************

உலகப் புகை ஒழிப்பு தினம் சென்ற வாரம் கொண்டாடப் பட்டது. அன்றைய தினமே விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தும், முடியாமல் போய் விட்டது. இருந்தாலும் இன்றோடு டாட்டா பைபை சொல்லி மூட்டை கட்டியாகி விட்டது, புகை, இனி எனக்குப் பகை. இதைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - நீங்கள் புகைப்பவர் என்றால் சிறிது நேரம் செலவு செய்து ஒரு சின்ன கணக்கு போட்டு பாருங்கள். ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட், ஒரு மாதம் எத்தனை, ஒரு வருடம் எத்தனை, அதற்கான செலவைப் பார்த்தால் உங்கள் மனம் மாறக் கூடும்.

**************************************************************************

மொபைல் போன் பற்றிய புது செய்தி ஒன்றை அறிய நேர்ந்தது. பாட்டரி பவர் மிகக் குறைவாக இருந்து, சார்ஜரும் உங்கள் வசம் இல்லாதிருந்தால் *3370# டயல் செய்து ok அழுத்தினால் போதுமாம். ரிசர்வில் இருக்கும் பவர் எடுக்கப் பட்டு பாட்டரி லெவல் பாதியாகக் கூடி விடுமாம். இன்னும் முயற்சி செய்து பார்க்கவில்லை. யாராவது ரிஸ்க் எடுத்து ட்ரை பண்ணிப் பார்த்து தகவல் சொன்னால் நல்லது.

**************************************************************************

சென்ற மாதம் ஊருக்குப் போய் விட்டு வந்த தம்பியின் புண்ணியத்தில் முப்பது புதிய புத்தகங்கள் வாங்க முடிந்தது. பல வருடக் கனவு பலித்தது. எவ்வளவு ஆசையோடு ஆற்று நீரை அள்ளி அள்ளிக் குடித்தாலும் வயிறு நிரம்பும் வரை தான் குடிக்க முடியும் என்பதைப் போல, புதுப் புத்தகவாசத்தை முகர்ந்து பார்ப்பதிலேயே மனசு நிறைந்து விடுகிறது. படிக்கத்தான் நேரம் இல்லை. வாத்தியார் சாருவின் ராசலீலாவும் நான் படிப்பதற்காக அலமாரியில் காத்திருக்கிறது. சீக்கிரம் படிக்க வேண்டும்.
**************************************************************************

ஒரு கேள்வி : First of first is first in me, middle of you is double in me, first of last is last in me, who am I?


விடையைக் கண்டு பிடித்தவர்களுக்கு : என்னை அறிந்து கொண்டதற்கு நன்றி.

**************************************************************************

ஆசிரியர்: முட்டாள்! உன் வயசுலே பில் கேட்ஸ் ஸ்கூல் பர்ஸ்ட்டா இருந்தார் தெரியுமா?

மாணவன்: சார்! உங்க வயசுலே ஹிட்லர் தற்கொலை பண்ணிக்கிட்டார் தெரியுமா?

**************************************************************************

மிக்ஸிங் பதிவு கவிதையோடு முடிய வேண்டுமாம். இதோ நான் ரசித்தது...


அசிங்கமாய் தான் பட்டிருக்கும்
அவளுக்கு என் பார்வை

உணர்ந்து பார்த்த என் விழிகளை
உற்று நோக்கி விட்டாள்

பயணம் நீடித்த பல மணி நேரமும்
பார்த்து கொண்டேதானிருந்தேன்

வேறெங்கும் இடமிருந்திருப்பின்
மாறி அமர்ந்திருக்கக் கூடுமவள்

பொறுக்கி என்றவள் நினைத்தது
பொருத்தமாய்த தான் இருந்திருக்கும் அவ்வேளையில்;


இறுதி வரை சொல்லவில்லை
இறந்த என் தங்கையின் பிரதி அவளென்று

-----செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி


**************************************************************************

Tuesday, June 2, 2009

மீரா பவனம் - தொடர்ச்சி


இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம் -- இப்படித் தான் எல்லாம் துவங்கியது....

தொடர்ச்சி.... கீழே.....

அவளின் வெற்று மார்பில் கை பட்டவுடன் உடல் பதறி சட்டென்று கையை உதறி விலகினேன். பக்கத்தில் பார்த்தால்.........


கணேசன் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தான். கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுக் கேட்டான்.

"என்னடா, மல்லிகா அக்கா உன்னைக் கூப்பிட்டிச்சி அப்படின்னு தான் சொன்னேன். அதுக்குள்ளே கனவு சீன் போயிட்டியா?"

"ஓ... அப்ப எல்லாம் என்னோட கற்பனையா...? டேய், சைக்கிள் கேப்புல என்ன என்னவோ நடந்து போச்சுடா....!"


"ஏன்டா நீ திருந்தவே மாட்டியா? என்ன என்னவோ புக் எல்லாம் படிக்கிர, நீ படிக்கறது மட்டும் இல்லாம என்னையும் படிடா படிடா-னு இம்சை பண்ற... எந்தப் பொண்ணை பத்தி பேச்சு எடுத்தாலும் அவ வயசு என்ன நம்ம வயசு என்னன்னு கூட யோசிக்காம கண்ட மாதிரி கனவு எல்லாம் கண்டு, அதை எங்கிட்ட வேற சொல்லி விடியக்காலைல என்னோட டவுசரும் நனையுற மாதிரி பண்ணிர்ற, வேணாண்டா ராசா.... இனிமே உன் கூட காளிதாஸ் வீட்டுக்கு வரவும் வேணாம்... வீட்டுல தேவை இல்லாம திட்டு வாங்கவும் வேணாம். நான் கிளம்புறேன்"


சொல்லிவிட்டு நான் தடுக்கத் தடுக்க நடந்து போய்....யே .... விட்டான். என்னை அறியாமல் எனது வலக்கை, என் இடது தோளில் கிள்ளிப் பார்த்துக் கொண்டது.


"நிசமாவே எல்லாம் கற்பனையா? வெறும் கனவா?... அடடா....."


ஆசையோடு அசை போட்டுக்கொண்டே நடந்தேன் மல்லிகா அக்கா வீட்டை நோக்கி. நான் கற்பனையில் பார்த்த அதே கலர் பாவாடை சட்டையில் இருந்தாள். துணிகளைக் கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.


"ஏண்டா, இன்னைக்கி கூப்பிட்டு விட்டா, அய்யா அடுத்த வருஷம் தான் வருவீகளோ...?"


நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு... அவளின் சட்டையின் முதல் பட்டன் போடாமல் விட்ட இடைவெளியைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்....

"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......


"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"


-----முற்றும்-----

***************************************************************************************************************








Friday, May 29, 2009

இரண்டு பிளாஷ்பேக்குகள்: பாகம் இரண்டு



இரண்டாவது ப்ளாஷ்பேக் - மீரா பவனம்


நாங்கள் அப்போது பொன்னகரம் - போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருந்தோம். அந்தத் தெருவில் இருந்த 2, 3 பெரிய வீடுகளில் எங்கள் வீடும் ஒன்று. மன்னிக்கவும். எங்கள் வீடு என்றா சொன்னேன்... இல்லை இல்லை...


வீட்டுக்காரர் வீடு பெரியது. பெரிய வீடு என்ற வர்ணனை எங்கள் வீட்டுக்கு பொருந்தாது. ரோட்டைப் பார்த்தபடி இருக்கும் வீட்டின் பின்புறத்தில் அவுட் அவுஸ் போல ஒண்டுக்குடித்தன ஓட்டு வீடுகள் இருந்தன. அதில் ஒரு ஒண்டுக்குடித்தன வீட்டில் தான் நாங்கள் வாடகைக்கு குடி இருந்தோம். இந்த ஒன்டுக்குடித்தனங்களுக்கு என தனி வாசல். பெரிய வீட்டை ஒட்டிய சந்தின் வழி சென்று பின் புறமாக நுழைய வேண்டும். ஒரு சனிக்கிழமை காலை வீட்டில் என் நோட்டுப்புத்தகத்தில் எதோ கிறுக்கிக் கொண்டிருந்தேன்.


"வந்துட்டாண்டா உன் பிரண்டு....போ...." அம்மா இப்படி அலறினால் கணேசன் வந்திருக்கிறான் என்று அர்த்தம்.


"போயி ஊர் சுத்தித் திரிஞ்சிட்டு விளக்கு வைக்கும் போது வா... வந்து பசிக்குதுன்னு மட்டும் கேட்ட...விளக்கு மாறு பிஞ்சிரும்"...


அம்மா எப்போதும் இப்படித்தான். என் நண்பர்களை பிடிக்கவே பிடிக்காது அவர்களுக்கு. டவுசர் மாத்திக்கொண்டு கிளம்பினேன்.


"டேய்.... டேய்... சாப்பிட்டு போடா..." குரலை உதாசீனம் செய்து வெளியே வந்தேன். கோனார் தமிழ் உரையை கையில் வைத்துக் கொண்டு கணேசன் நின்றிருந்தான்.


"இதை எதுக்குடா கொண்டு வந்த"


"அப்புறம் வீட்டுல இருந்து கிளம்ப எதாவது காரணம் சொல்ல வேணாம்? தமிழ் பரீட்சைக்கு படிக்க போறேன்னு சொல்லிட்டு வந்தேன்"


"சரி வா... காளிதாஸ் வீட்டுக்கு போலாம்"...


காளிதாஸ் - வீட்டுக்கு சொந்தக்காரர். பெரிய வீட்டுக்கு "மீரா பவனம்" என்று ஒரு பெயர் இருந்தாலும், நாங்கள் எப்போதும் காளிதாஸ் வீடு என்று தான் சொல்வோம்.


இரண்டு அறைகள் மட்டும் கொண்டிருந்த எங்கள் ஓட்டு வீடு, இந்தக் கதையில் அவ்வளவு முக்கியம் இல்லை. வீடுக்காரருடைய பெரிய வீடு தான், இக்கதையின் ஹீரோ. அதைப் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.


"மீரா பவனம்" பெயருக்கேற்ற கம்பீரம் அதன் தோற்றத்திலும் இருக்கவே செய்தது. பெரிய காம்பவுண்டு சுவர்கள். தரையில் இருந்து 15 படிக்கட்டுகளில் வாசல். வெளி வாசலில் இரும்பில் க்ரில் கேட். படிக்கட்டின் இரு மருங்கிலும் பெயர் தெரியாத மரங்கள்..ஒரே மாதிரி தோற்றத்தில்...... வலது மூலையில் மட்டும் ஒரு ஒற்றைத் தென்னை மரம். இவை அனைத்தும் காம்பவுண்டுக்கு உள்ளேயே. படிகளுக்கு இரு புறமும் இருக்கும் வெளி தான் எங்கள் விளையாட்டுக்களம். வலது பக்க சாளரம் வழியே உள்ளிருந்து மரத்தடிக்கு வரும் எர்த்திங் கம்பியைத் தொட்டால் மெலிதாக, மிக மெலிதாக ஒரு ஷாக் உடம்பில் ஓடி பற்கள் கட கட கட வென ஆடும்... எங்களுக்கு பிடித்த விளையாட்டு.


"இன்னிக்கி என்ன வெளாட்டுடா வெளாடலாம்?"


"முதல்ல கொஞ்ச நேரம் இப்படி உக்காருவோம்.. அப்புறமா வெளாடலாம்."...


படிகளில் அமர்ந்தோம்... அப்போது தான் கவனித்தேன். நேற்று போட்ட லைட்டை அணைக்கவே இல்லை. வீட்டுக்காரர் தன குடும்பத்தோடு வேறு ஊரில் இருந்தார். அவர் பசங்களுக்கு விடுமுறை வந்தாலோ அல்லது வேறு எதாவது விசேஷம் என்றாலோ தான் இங்கே வருவார். அதுவரை பெரிய வீடு பூட்டித்தான் கிடக்கும். பெரிய பக்திமான் அவர். கடவுள் காரியங்களுக்கு அள்ளியும், மற்ற காரியம் என்றால் கிள்ளியும் கொடுக்கும் தயாளன். மாலை வேளைகளில் வீட்டில் விளக்கு எரியாவிட்டால் ஸ்ரீதேவி வீட்டை விட்டுப் போய் விடுவாள் என்பதாலும், எங்கள் வீட்டுக்காரருக்கு ஸ்ரீதேவியை வைத்துக் கொள்ள ஆசை இருந்ததாலும் வீட்டில் யாரும் இல்லாவிட்டாலும் தினசரி சாயங்காலம் பெரிய வீட்டு ஹாலில் லைட் போட்டு, காலையில் அணைத்து விடுவது வழக்கம் ஆயிற்று.


நீண்ட நாள் நண்பர் என்பதால், இந்த உதவியை (லைட் போட்டு அணைப்பது) தொடர்ந்து செய்து வருமாறு என் அப்பாவிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. லைட் ஸ்விட்ச் கைக்கு எட்டும் அளவுக்கு வளர்ந்ததும் அந்தப் பெரும் பொறுப்பு என் தலையில் விழுந்தது. காம்பவுண்ட் கேட், உள்ளே வாசல் கதவு இரண்டின் சாவிகளும் என்னிடம் இருக்கும்.


லைட்டை அனைத்து விட்டு வந்தேன். எதோ தீவிர யோசனையில் இருப்பவன் போல எங்கோ வெறித்துப் பார்த்த படி அமர்ந்து இருந்தான் கணேசன்.


"என்னடா யோசனை"


"ஒன்னும் இல்லடா... இந்த மல்லிகா அக்கா இல்ல.. அது உன்னை வீட்டுக்கு வரச் சொல்லுச்சி... சொல்ல மறந்துட்டேன்டா "..


"அடப்பாவி..." ஓங்கி நடு முதுகில் நச்சென்று ஒன்று வைத்தேன். அவனை உடனே வெளியே தள்ளி நானும் வெளியேறி கதவைப் பூட்டினேன்.... மானசீக ஸ்கூட்டரை உதைத்து மல்லிகா அக்கா வீட்டை அடைந்தேன்.


"பூ பறிக்கவா கூப்பிட்ட?"......


"ஆமா டா, சீக்கிரம் வா... அம்மா வெளில போயிருக்குது.. அது வர்றதுக்குள்ள பூ பறிச்சிட்டு வந்திருவோம், என்ன?"


"ம்....."


மறுபடியும் காளிதாஸ் வீடு.... அக்கம் பக்கம் பார்த்து விட்டு படாரென உள்ளே நுழைந்தோம்... உடனே கேட்டை இழுத்துப் பூட்டிவிட்டு, இடது பக்க மாற நிழலில் அமர்ந்தோம். மல்லிகா அக்கா அவசரப்படுத்தினாள்.


"டேய்.. சீக்கிரம் பூ பறிச்சிட்டு போலாம்டா..."


நெஞ்சு படபடக்க, கை காலெல்லாம் மெலிதாக நடுங்கத் தொடங்கி இருந்தது.... மல்லிகா அக்கா என் கையைப் பிடித்து அவள் சட்டைக்கு மேல், மார்பில் வைத்துக் கொண்டாள்.. ஆதரவாக அணைத்து காதுகளில் கிசுகிசுத்தாள்...


"பயப்படாதடா...."


சொல்லிக் கொண்டே தன் சட்டையை உயர்த்தி என் கையை உள்ளே ஒரு பக்க மார்புடன் சேர்த்து அழுத்திப் பிடித்து, கண்களை மூடிக் கொண்டாள்.




----- தொடரும்-------

Wednesday, May 6, 2009

டாடி ரிட்டன்ஸ்.....


வாரான்.... இவன் வாரான்... வாரான் வரான் வரான் லே... ரொம்ப நாள் கழிச்சு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரபோறோம்ல... (டயலாக்கை மாத்துங்கப்பா) நாளை இரவு.... இரண்டு பிளாஷ்பேக்குகள் - இரண்டாம் பாகம்... வாசிக்கத் தவறாதீர்கள்... (ஆமா... இதைப் படிக்க லட்சம் பேரு காத்துக்கிட்டு இருக்க மாதிரி.... சரி சரி.. அடக்கி வாசி)